புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

இலங்கையில் வரிவிதிப்பு : கோட்பாடும் நடைமுறையும்

தற்போது இலங்கையில் வரிவிதிப்பு தொடர்பாக தமிழில் எந்தவொரு நூலும் காணப்படாத நிலையில் இவ்விடைவெளியினை நிரப்பும் வண்ணம் இலங்கையில் வரிவிதிப்பு : கோட்பாடும் நடைமுறையும் என்னும் இந்நூல் வெளிவந்துள்ளது. இப்பாடநூல் க.பொ.த. உயர்தர மாணவர்கள், பல்கலைக்கழக உள்வாரி மற்றும் வெளிவாரி மாணவர்கள், பொருளியல் ஆசிரியர்கள் மற்றும் பொதுஅறிவினைத் தேடுவோர் எனஅனைவரும் வரிவிதிப்பு தொடர்பான கோட்பாடுகளையும் வரிவிதிப்புதொடர்பாக இலங்கையில் எவ்வாறான நிலைமை காணப்படுகின்றது என்பதனையும் அறிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது. 1983 ஆம்ஆண்டிலிருந்துஆரம்பித்த இன யுத்தமானது பொருளாதாரம் மீது பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. விரைவான அபிவிருத்தியை நாடு வேண்டி நிற்கும் ஒரு காலகட்டத்தில் கூடுதலாகப் படுகடன்களில் தங்கிருக்காமல் உள்நாட்டிலேயே நிதிவளங்களைத் தேடவேண்டியது அவசியமாகும். கோட்பாடு மற்றும் பலநாடுகளின் வரிதொடர்பானஅனுபவங்களைினை ஒப்புநோக்கி 1980 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையின் வரிதொடர்பான தரவுகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் இலங்கையின் வரிவருமானத்தினைஅதிகரிப்பதற்கு எவ்விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதுபற்றி இந்நூல் விலாவாரியாக விளக்குகின்றது. 
 
அணிந்துரை
 
கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை முதுநிலை விரிவுரையா

க.குணராசா ( செங்கை ஆழியான் )
Kunarasa, K

கந்தையா குணராசா ஈழத்துத் தமிழ் இலக்கியச் சூழலில் செங்கை ஆழியான் ஆக அடையாளம் காட்டுபவர். இவர் சிறுகதை, நாவல், ஆய்வு, தொகுப்பு எனப் பன்முக்க் களங்களில் இயங்குபவர். இவரது படைப்பாளுமையால் மிக வெற்றிகரமான எழுத்தாளர் எனும் அந்தஸ்துக்கு உரித்தானவர். 1960களின் நடுப்பகுதியில் இருந்து இன்றைய காலம்வரை செங்கை ஆழியான் பெயரைத் தவிர்த்து ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு எழுதப்படமுடியாது.

இவர் தொகுத்த மறுமலர்ச்சிக் கதைகள், ஈழகேசரிக்கதைகள், முன்னோடிச் சிறுகதைகள் போன்றவை ஈழத்துச் சிறுகதை வரலாற்றை மீள் வாசிப்புக்கு உள்ளாக்கும் விமரிசனப் பண்புகள் கொண்டவை. இத்தொகுப்பு முயற்சியில் இவர் ஈடுபட்டதன் மூலம் இலக்கிய வரலாறு எழுதியலுக்குப் புதுவளம் சேர்க்கின்றார். இதன் பிறிதொரு அடையாளமாகவே ஈழத்துத் தமிழ் சிறுக